உட்டாலக்கடியின் உட்டாலக்கடி
///இது எந்த ஊரு தர்க்கமோ புரியலை. ரெண்டுமே நல்லதுன்னு சமமானதுன்னு சொல்லிட்டு வந்த பார்ட்டி (கீதாசிரியர்) ) படக்குனு ஒரு அந்தர் பல்ட்டி அடிச்சு . செயலை துறப்பதை காட்டிலும் செயலை செய்வதே சிறந்ததுங்கறாரே.//
கீதையில் இரண்டு விஷயத்தின் நல்லது கேட்டதைக் கூறி அவரவர்களுக்கு தேவையானதை எடுத்துக்க சொல்கிறது. ஆங்கிலத்தில் unique என்ற ஒரு வர்த்தையுண்டு பிரத்தேகம் எனப்பொருள்படும். இங்கே இரண்டு விஷயமும் பித்தேகமானது, சமமல்ல. கீதையின் எந்த இடத்தில் இரண்டும் சமம் என்று கூறியதாக காரணங்கள் கிடைத்தால் மேலே ஆராயலாம்
//பலனை எதிர்பார்க்காம கர்ம யோகம் செய்யறதெல்லாம் கொக்கு தலைல வெண்ணைய வச்சு பிடிக்கிற மாதிரி. //
பலனை வாங்காதே என்று கூறியதாக கற்பனை செய்து, அதற்கு புதுப் புது சாயம் பூசுறீங்க. இயற்கையா அமைகிற செயலுக்கும் செயற்கையா அமைகிற செயலுக்கும் வித்தியாசமுண்டு. ஒரு செயல் சிறப்பாக இருக்க வேண்டுமென்றால் முழு ஈடுபாடு வேண்டும் எதையும் எதிர்பாக்காமல் இயற்கையாக செய்யும் செயல், ஏதோவொன்றை எதிர்பார்த்து அதற்காக செயற்கையாக செய்யும் செயலைவிட சிறந்ததுதானே.
//உழைத்தே அறியாத அந்த இனம் பிழைப்பதே துர்லபமாகிவிடும் என்பதால் செயலுக்கு ( கரும யோகத்துக்கு )வக்காலத்து வாங்குகிறார் கீதாசிரியர்.//
உழைக்காமல் ஜாதகம் பார்ப்பதாக மக்களை ஏமாற்றி உட்டாலக்கடி பதிவுகள் எழுதிக் கொண்டுயிருப்பவர்களுக்காகத் தான் செயலின்மையை கொண்டுவந்ததாகக் கூறுகிறீர்கள் போல
//ரெகுலர் ஸ்டடீஸுக்கும் தொலை தூர கல்விக்கும் வித்யாசமே கிடையாதுன்னு யூனிவர்சிட்டிங்க அடிச்சி விடறதை போல //
ரெகுலர்ல படிச்சவனெல்லாம் புத்திஜீவிபோலவும் தொலை தூரக் கல்வியில் படிச்சவன் எல்லாம் முட்டாள் போலவும் இடத்தை வைத்து மட்டும் கல்வியை கணிக்கமுடியாதே. அவனிடத்திலுள்ள ஆர்வம் தானே முக்கியம்
//”புலனை அடக்கிய”ங்கற வார்த்தைய பாருங்க. கீதை தலைசிறந்த மனோதத்துவ நூல்னு சவுண்டு விடறவங்க கூட இருக்காய்ங்க. புலனை அடக்குதல்ங்கறது மனோதத்துவ அடிப்படைக்கே விரோதம். மனிதனுக்கு வர்ர மனக்கோளாறுகளுக்கு முதல் காரணம் அவன் தன் மனதை அடக்கறதுதான். (அதுக்காக மனம் போன போக்குல மனிதன் போகனும்னு நான் சொல்லலே.)//
என்னங்க கடைசியில் மனம் போன போக்குல போகாதேன்னு அந்தர் பல்டி அடிக்கிறீங்க. இப்ப ஸ்மெல் பண்ணி பார்த்தா, உங்க ஜாதகம் சொன்ன பாதையில் போகணும்னு சொல்லவரீங்களா?
//புலன் களின் கிளர்ச்சியை அடக்க முடியாதுங்கறப்போ அதுக்கு சட்டம், சமூகத்துக்கு இணக்கமான வழில ஒரு வடிகாலை தேடிக்கிறதுதான் மனிதனின் மன நலத்துக்கு உத்தமமான மார்கம்.//
ஒருவனால் அடக்கமுடியதவிஷயம் எல்லாராலும் அடக்கமுடியாது என்று கேள்வி ஞானத்தை அடைத்துவிட்டீங்களா? மற்றவர் குடும்பத்தின் மீது ஏற்படும் புலன்களின் கிளர்ச்சியை அடக்காமல் சட்டம் போடச் சொல்கிறீகள் போல
//புலனடக்கம் புண்ணாக்குனு கண்டதையும் அடக்கினா அந்த சமாசாரம் மேம்போக்கான கான்ஷியஸ் மைண்ட்லருந்து ஆழமான சப்கான்ஷியஸ் மைண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆயிருது. //
முயற்சி செய்யாமலே முடிவு கட்டியாச்சு. அப்போ அடக்கி வச்சவங்களோட சப்கான்ஷியஸ் மைண்டுல அதுயிருக்கும் என்கிறீங்க. இங்க தான் நிக்கிறது கீதை. எதையோ எதிர்பார்த்து நீங்க அடக்கமுயன்றால் (செயற்கையாக) அது அப்படித்தான் போகும், பலனை எதிர்பார்க்காமல் அடக்கினால் சப்கான்ஷியஸ் மைண்டுலையும் நிக்காது.
//மனோதத்துவ சாஸ்திரத்தின் அடிப்படைக்கே விரோதமான புலனடக்கத்தை பத்தி பேசற பகவத்கீதை தலை சிறந்த மனோதத்துவ நூலாம். //
மனம் சொல்வதையெல்லாம் செய்தால் மனிதனுக்கு மூளை தேவையில்லையே! மனதை சரியான பாதைக்கு அனுப்பினால்தானே மனோதத்துவமே தேவை
//பரமாத்மாவை இயற்கையின் மறு உருவா,உருவகமா, பிரதி நிதியா காட்டற கீதாசாரியர் புலன் களை அடக்குவது இயற்கைக்கு விரோதமானது அதாவது கிருஷ்ணருக்கே விரோதமானதுங்கற சங்கதியை வசதியா மறந்துர்ரார்.//
வயலில் புல் முளைப்பது இயற்கை என விடமுடியாது. இங்கே கர்மா என்கிற ஒன்றை சிந்தியுங்கள். தேவையில்லாததை அடக்குவதும் கர்மாதனே.
பகுத்தறிவாளர் மீதான அவிக அண்டர் எஸ்டிமேட்டை பத்தியெல்லாம் அடுத்த பதிவுல பார்க்கலாம்!
Quiz
who is that உட்டாலக்கடி?
a)தனது பதிவுகளுக்கு மெம்பரல்லாதவர் கமென்ட் போட தடை போட்டிருப்பவர்
b)இந்தியாவை பணக்கார நாடாக்கிட திட்டம் தீட்டி அதை அமல் படுத்தியே தீர்வதென்று பிடிவாதமாய் உழைத்து ஏழையானவன்.
c)2006 ஹிட்ஸ் மட்டும் கண்டு இருட்டில் இருந்தவன்
d)தொழில் முறை ஜோதிடனாக மூடநம்பிக்கையை வளர்ப்பவர்.
e)நிர்வாண உண்மைகள்
விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் பின்னர் அறிவிக்கப்படும்